ஊரடங்கு தளர்த்தப்படும் நேரத்தில் காத்தான்குடி நகர சபை எல்லைக்குள் மறு அறிவித்தல் வரை சகாத், பித்ரா என வீடுகள், கடை வீதிகளில் யாசகம் கேட்டுத் திரிவது உள்ளூர் வெளியூர் பொதுமக்கள் என அனைவருக்கும் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.
பாரிய தொற்று நோய் பரவும் இந்த இக்கட்டான கால கட்டத்தில் அரசின் அறிவுறுத்தல்களை கடைப்பிடிப்பது எம் அனைவர் மீதும் உள்ள தலையாய கடமையாகும்.
இது காத்தான்குடி நகர சபையின் ‘கொரோனா- வருமுன் காப்போம்’ எனும் விசேட வேலைத்திட்டத்தின் முக்கிய அறிவிப்பாகும்.
No comments:
Post a Comment