தேர்தல் நடவடிக்கைகளில் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் - முன்னாள் சபாநாயகர் கரு - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 22, 2020

தேர்தல் நடவடிக்கைகளில் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் - முன்னாள் சபாநாயகர் கரு

(நா.தனுஜா) 

தேர்தல் பிரசாரங்கள், வாக்களிப்பு மற்றும் வாக்கு எண்ணுதல் ஆகிய அனைத்து செயற்பாடுகளிலும் உரிய சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய வலியுறுத்தியிருக்கிறார். 

கொவிட்-19 கொரோனா வைரஸ் பரவல் இன்னும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்படாத போதிலும், பொதுத் தேர்தலுக்கான திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையிலேயே முன்னாள் சபாநாயகர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது தேர்தலுக்கான திகதி நிர்ணயிக்கப்பட்டிருக்கும் நிலையில் ஜனநாயகத்திற்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான திட்டங்கள் வகுக்கப்படுவது அவசியமாகும். 

தேர்தல் பிரசாரங்கள், வாக்களிப்பு மற்றும் வாக்கு எண்ணுதல் ஆகிய அனைத்து செயற்பாடுகளிலும் உரிய சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுப்பது அவசியமாகும். 

மேலும் அரசியலமைப்பு நெருக்கடியொன்று ஏற்படுவதற்கு அனுமதிக்காத வகையில் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment