இன்று மாலை 6 மணி முதல் நாடு பூராகவும் ஊரடங்குச் சட்டம் அமுல் - News View

About Us

About Us

Breaking

Thursday, March 19, 2020

இன்று மாலை 6 மணி முதல் நாடு பூராகவும் ஊரடங்குச் சட்டம் அமுல்

நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கை அமுல்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி செயலகம் விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இலங்கை முழுவதும் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் எதிர்வரும் திங்கட்கிழமை வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், இன்று மாலை 6 மணி முதல் எதிர்வரும் 23 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 6 மணி வரை ஊரடங்கை அமுல்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment