வடக்கு, கிழக்கு ஹர்த்தாலுக்கு ஜீவன் முழுமையான ஆதரவு : மனிதாபிமானமற்ற செயற்பாடு வருத்தமளிப்பதாக தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, August 11, 2025

வடக்கு, கிழக்கு ஹர்த்தாலுக்கு ஜீவன் முழுமையான ஆதரவு : மனிதாபிமானமற்ற செயற்பாடு வருத்தமளிப்பதாக தெரிவிப்பு

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் - முத்துஐயன்கட்டு பகுதியில் இராணுவத்தால் தாக்கப்பட்டதாக உயிரிழந்தவருக்காக வடக்கு மற்றும் கிழக்கில் 2025 ஓகஸ்ட் 15ஆம் திகதி, வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்படவுள்ள ‘ஹர்த்தால்’ போராட்டத்திற்கு முழுமையான ஆதரவினை வழங்குவதாக ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

கடந்த 7ஆம் திகதியன்று, முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முத்துஐயன்கட்டு பகுதியில் 32 வயதான எதிர்மன்னசிங்கம் கபில்ராஜ் என்ற இளம் குடும்பஸ்தர், இராணுவத்தால் தாக்கப்பட்டு காணாமல்போனதாக தேடப்பட்டு வந்தார். 

பின்னர் கடந்த சனிக்கிழமை (09) அன்று, அவரது சடலம் முத்துஐயன்கட்டுக் குளத்திலிருந்து மீட்கப்பட்டது.

இந்நிலையில் நீதிக்கான கோரிக்கையிலும், இராணுவத்தின் அநீதியான நடவடிக்கைகளுக்கு எதிராகவும் நடைபெறவுள்ள இந்த ஹர்த்தாலுக்கு, ஒற்றுமையையும் உறுதியான ஆதரவையும் வெளிப்படுத்துவதாகவும், “யுத்தம் நிறைவடைந்து 16 ஆண்டுகள் கடந்த பின்பும், இவ்வாறான மனிதாபிமானமற்ற செயற்பாடுகள் நிகழ்வது மிகவும் வருத்தமளிப்பதாகவும், இதனை ஏற்றுக்கொள்ள முடியாது” எனவு அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment