குருக்கள்மடம் படுகொலை புதைகுழியை தோண்டவும் : அரசாங்கத்திடம் சிப்லி பாறூக் கோரிக்கை - News View

About Us

About Us

Breaking

Sunday, July 13, 2025

குருக்கள்மடம் படுகொலை புதைகுழியை தோண்டவும் : அரசாங்கத்திடம் சிப்லி பாறூக் கோரிக்கை

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தின் குருக்கள் மடம் பகு­தியில் தமி­ழீழ விடுதலைப் புலி­க­ளினால் கடத்­தப்­பட்டு படுகொலை செய்­யப்­பட்டு புதைக்­கப்­பட்­டுள்ள நூற்­றுக்கும் மேற்­பட்ட முஸ்­லிம்­களின் ஜனாஸாக்­களை தோண்டி எடுத்து இஸ்­லா­மிய முறைப்­படி அடக்கம் செய்ய தற்­போ­தைய தேசிய மக்கள் சக்தி அர­சாங்கம் முன் வரவேண்டும் என கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்­பினர் பொறி­யி­ய­லாளர் சிப்லி பாறூக் வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.

இது தொடர்­பாக அவர் விடுத்­துள்ள அறிக்­கையில் 12.07.1990 ம் ஆண்டு ஹஜ் கட­மையை முடித்துக் கொண்டு வந்த முஸ்லிம் சகோ­த­ரர்கள் மற்றும் இன்னும் சில முஸ்லிம் சகோ­த­ரர்கள் குருக்கள் மடம் பகுதியில் வைத்து தமி­ழீழ விடு­தலைப் புலி பயங்­க­ர­வா­தி­களால் கடத்தப்பட்டு படுகொலை செய்­யப்­பட்டு புதைக்­கப்­பட்­டார்கள்.

இதில் அதி­க­மான முஸ்­லிம்கள் காத்­தான்­கு­டியைச் சேர்ந்­த­வர்­க­ள். இதில் 167 பேர் கொல்­லப்­பட்­டனர். ஆனால் இன்னும் அவர்­களின் ஜனா­ஸாக்கள் தோண்­டப்­படவில்லை.

தற்­போது செம்­மணி புதை­குழி தோண்­டப்­ப­டு­கி­றது. இதேபோன்று குருக்கள் மடத்தில் புதைக்­கப்­பட்­டுள்ள முஸ்­லிம்­களின் சட­லங்­களும் ஜனா­ஸாக்­களும் தோண்டி எடுக்­கப்­பட்டு இஸ்­லா­மிய முறைப்­படி அடக்கம் செய்­யப்­படல் வேண்டும்.

இது தொடர்­பாக நீதி­மன்றம் சென்று தோண்டி எடுப்­ப­தற்­கான நடவடிக்கை எடுக்­கப்­பட்டு நீதி­மன்ற உத்­த­ரவை 2014 ஒக்­டோபரில் பெற்ற போதிலும் இதுவரை தோண்­டப்­பட வில்லை.

இலங்­கையில் இடம்­பெற்ற யுத்­தத்­தினால் முஸ்லிம் மக்­களும் பாதிக்கப்­பட்­டார்கள் என்­பது வர­லாற்று உண்­மை­யாகும்.

எனவே குருக்கள் மடத்தில் கடத்­தப்­பட்டு புதைக்­கப்­பட்­டுள்ள முஸ்லிம்­களின் ஜனா­ஸாக்­க­ளையும் தோண்டி எடுத்து இஸ்­லா­மிய முறைப்­படி அடக்கம் செய்ய நட­வ­டிக்கை எடுக்குமாறு வேண்டு கோள் விடுகிறேன் என கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக் மேலும் தெரிவித்துள்ளார்.

Vidivelli

No comments:

Post a Comment