முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது பிரித்தானிய விஜயம் தொடர்பான குற்றச்சாட்டுக்களை முற்றாக மறுத்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2023 ஆம் ஆண்டில் இங்கிலாந்திலுள்ள வோல்வர்ஹாம்ப்டன் பல்கலைக்கழகத்திற்கு (University of Wolverhampton) விஜயம் மேற்கொண்டமை தொடர்பில் பரவிவரும் கருத்துக்கள் தொடர்பில் ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் குறிப்பிடப்படுவதாவது, 'ரணில் விக்கிரமசிங்க 2023 ஆம் ஆண்டில் அரசாங்க நிதியை பயன்படுத்தி லண்டனுக்கு சுற்றுலா சென்று வோல்வர்ஹாம்ப்டன் பல்கலைக்கழகத்தில் (University of Wolverhampton) நடைபெற்ற பட்டமளிப்பு வழங்கும் நிகழ்வில் பங்கேற்றதாக பல தகவல்கள் வெளியாகியிருந்தன.'
'இந்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை.'
'இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் முற்றிலும் மறுக்கப்படுகின்றன.'
'இது தொடர்பில் எதிர்காலத்தில் சட்ட ரீதியாக தெளிவுப்படுத்தப்படும்' என குறிப்பிடப்பட்டுள்ளது.
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருந்தபோது அவரது வெளிநாட்டு பயணங்கள் குறித்து விசாரணை நடத்துவது குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்ததை தொடந்து ரணிலின் இந்த கருத்து வெளிவந்துள்ளது.
இந்த நிலையில், ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் தனிப்பட்ட வெளிநாட்டுப் பயணத்திற்கு நிதியளிக்க அரசு நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment