2025 ஆம் ஆண்டில் பெப்ரவரி மாதத்தின் முதல் ஐந்து நாட்களில் 44,293 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி ஜனவரி மாதம் 01ஆம் திகதியிலிருந்து பெப்ரவரி மாதம் 05 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 297,054 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
பெப்ரவரி மாதத்தில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 5,823 ஆகும்.
அதன்படி, ரஷ்யாவிலிருந்து 5,795 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 4,710 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 3,100 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 3,185 சுற்றுலாப் பயணிகளும், பிரான்ஸிலிருந்து 2,167 சுற்றுலாப் பயணிகளும், போலந்திலிருந்து 2,142 சுற்றுலாப் பயணிகளும், அவுஸ்திரேலியாவிலிருந்து 1,597 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment