முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ சற்று முன்னர் (03) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
கதிர்காமத்தில் அமைந்துள்ள அரசாங்கத்திற்கு சொந்தமான காணியின் உரிமை தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக இன்று காலை 10.00 மணியளவில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் அந்த காணி தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷவின் பிரதான பாதுகாப்பு அதிகாரியான நெவில் வன்னியாராச்சி கடந்த வெள்ளிக்கிழமை (27.12.2024) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார்.
இதன்போது, அவர் 4 மணி நேரம் வாக்குமூலம் வழங்கியிருந்ததாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
இதேவேளை, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவும் இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நிதியமைச்சராகப் பதவி வகித்த காலப்பகுதியில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்காகவே அவர் குறித்த திணைக்களத்திற்குச் செல்லவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment