பாடசாலை மாணவி கடத்தப்பட்ட சம்பவம் : பிரதான சந்தேகநபர், சாரதி, நண்பருக்கு விளக்கமறியல் - News View

About Us

About Us

Breaking

Thursday, January 16, 2025

பாடசாலை மாணவி கடத்தப்பட்ட சம்பவம் : பிரதான சந்தேகநபர், சாரதி, நண்பருக்கு விளக்கமறியல்

கண்டி, தவு­ல­கல பொலிஸ் பிரிவில், மேல­திக வகுப்­புக்­காக சென்றுகொண்­டி­ருந்தபோது கடத்­தப்­பட்ட பாட­சாலை மாணவி ஆபத்­தின்றி பொலி­ஸாரால் மீட்­கப்­பட்ட நிலையில், கடத்­தலின் பிரதான சந்­தேக நப­ரையும் அவ­ரது நண்பர் மற்றும் வேன் சாரதியையும் எதிர்­வரும் 27 ஆம் திக­தி­ வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க கம்­பளை நீதிவான் நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டுள்­ளது.

வேன் சாரதி நேற்றுமுன்தினம் (14) நீதி­மன்றில் ஆஜர் செய்யப்பட்டதுடன் தடுப்புக் காவலின் கீழ் விசா­ரிக்­கப்­பட்ட பிர­தான சந்­தேகநபர் மற்றும் அவ­ரது நண்பர் ஆகியோர் நேற்று (15) நீதி­மன்றில் ஆஜர் செய்­யப்­பட்­டனர். இதன்­போதே கம்­பளை நீதிவான் காஞ்­சனா கொடித்­து­வக்கு இவர்­களை 27 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க உத்­த­ர­விட்டார்.

கடத்­தலின்போது வேனின் சார­தி­யாக செயற்­பட்ட கம்­பளை, கஹட்டபிட்­டிய பகு­தியைச் சேர்ந்த மொஹம்மட் அன்வர் சதாம், பிரதான சந்­தேகநப­ரான மொஹம்மட் நாசிர், அவ­ரது நண்பர் ஆகியோரே இவ்­வாறு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்பட்­டுள்­ளனர்.

அத்­துடன் இந்த கடத்­த­லோடு தொடர்­பு­பட்ட அனை­வ­ரையும் கைது செய்­துள்­ள­தாக தவு­ல­கல பதில் பொலிஸ் பொறுப்­ப­தி­காரி சம்பத் ரண­சிங்க குறிப்­பிட்டார்.

பாட­சாலை மாணவி ஒரு­வரை கறுப்பு நிற வேனில் வந்த சிலர் கடந்த 12 ஆம் திகதி பலாத்­கா­ர­மாக கடத்திச் சென்ற விவ­காரம் தொடர்பில் விரி­வான விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டன‌. 

அதன்­படி, கடத்­தலின் பிர­தான சந்­தேகநபர், மாண­வியின் உற­வினர் என அடை­யாளம் காணப்­பட்ட நிலையில், அவர் கடத்­தப்­பட்ட தினம் மாலை முதல் மாண­வியின் தந்­தைக்கு தொலை­பேசி அழைப்புக்களை எடுத்­தி­ருந்­த­தாக பொலிஸார் கூறினர். 

அத்­துடன் மாண­வியும் தனது தந்­தை­யுடன் தொலை­பே­சியில் பேசி தன்னை காப்­பாற்­று­மாறு கோரி­யுள்­ள­தாக பொலிஸார் கூறினர்.

இந்த நிலையில் ஏற்­க­னவே, 12 ஆம் திகதி முதலில் கைது செய்யப்பட்ட வேனின் சார­தி­யிடம் தடுப்புக் காவல் விசா­ர­ணையின்போது பெற்­றுக்­ கொள்­ளப்­பட்ட தக­வல்கள் மற்றும், தொலை­பேசி கோபுரத் தக­வல்கள், சந்­தேகநபர் பயன்­ப­டுத்­திய தொலை­பே­சியின் EMI இலக்­கத்தை மைய­ப்ப­டுத்­திய விசாரணைகளில், பிர­தான சந்­தேகநபர், அம்­பாறை பகு­தியில் தங்கியி­ருப்­பதை பொலிஸார் கண்­ட­றிந்­தனர்.

இந்நிலை­யி­லேயே அம்­பாறை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­கா­ரிக்கு இது குறித்த தக­வல்கள் பரி­மாற்­றப்­பட்ட நிலையில், அந்த தகவல்களை மையப்­ப‌­டுத்தி, 13 ஆம் திகதி காலை, அம்­பாறை பஸ் தரிப்பு நிலை­யத்தில் வைத்து மாண­வியை மீட்டு, பிர­தான சந்தேகநபரைக் கைது செய்­த­தாக பொலிஸ் பேச்­சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் புத்­திக மன­துங்க குறிப்­பிட்டார்.

இத­னை­ய­டுத்து நேற்றுமுன்தினம் கடத்­த­லுடன் தொடர்­பு­பட்ட பிரதான சந்­தேகநபரின் நண்­பரை கம்­பளை, ஜய­மா­புர பகு­தியில் வைத்து தவு­ல­கல பொலிஸார் கைது செய்­தனர்.

விசா­ர­ணை­களின்போது, கடத்­தலின் பின்னர் பிர­தான சந்தேகநபரின் நண்­பரும், சார­தியும் பொலன்­ன­ருவை வரை உடன் சென்­றுள்­ள­மையும் அங்­கி­ருந்து இரு­வரும் கம்­ப­ளைக்கு திரும்பியுள்ள­மையும் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

இந்த நிலையில் சந்தேகநபர்கள் மீது கடத்தல், கப்பம் கோரல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் விசாரணைகள் இடம்பெறுவதுடன் வாக்கு மூலங்களில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடப்பதாக பொலிஸார் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர்.

Vidivelli

No comments:

Post a Comment