2025 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, January 9, 2025

2025 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு

2025 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இன்றையதினம் (09) பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

இதன்படி, ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு (பட்ஜெட் உரை) பெப்ரவரி 17ஆம் திகதியும், இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் பெப்ரவரி 18ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை 7 நாட்களுக்கும் நடத்தப்படவுள்ளது.

அதன் பின்னர், சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு பெப்ரவரி 25ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் மீதான குழுநிலை விவாதம் பெப்ரவரி 27ஆம் திகதி முதல் மார்ச் 21ஆம் திகதி வரை 4 சனிக்கிழமைகள் உட்பட 19 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பை மார்ச் 21ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வரவு செலவுத் திட்ட விவாதத்தின்போது வாய் மூல விடைக்கான 5 கேள்விகளுக்கு காலை 9.30 மணி முதல் 10.00 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், வரவு செலவுத் திட்ட விவாதம் காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெறும்.

மேலும், வாக்குப்பதிவு நடைபெறும் பெப்ரவரி 25 மற்றும் மார்ச் 21 ஆகிய திகதிகளைத் தவிர ஏனைய அனைத்து நாட்களிலும் ஒத்திவைப்பு வேளை பிரேரணைகளுக்கு மாலை 6.00 மணி முதல் 6.30 மணி வரை நேரத்தை ஒதுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment