(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் விசேட தேவையுடையவர்களின் கொடுப்பனவை 7 ஆயிரத்தி 500 ரூபாவில் இருந்து 10 ஆயிரம் ரூபா வரை நிச்சியமாக அதிகரிப்போம் என சுகத் வசந்த டி சில்வா தெரிவி்த்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (06) அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால வாக்குப்பதிவு கணக்கறிக்கை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகாெண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், விசேட தேவையுடையவர்கள் என்பது இந்த உலகுக்கு அழகை கொண்டுவந்த தூதுக்குழுவினராகும். பன்முகத்தன்மையின் அடிப்படையிலேயே வர்ணமயங்கள் ஏற்படுத்தப்படுகின்றன.
உங்கள் மத்தியில் கண் பார்வை அற்ற என்னால், இந்த இடத்தில் பன்முகத்தன்மை ஏற்பட்டிருக்கிறது. மனித சமூகத்தில் வர்ணமயங்கள் ஏற்பட்டிருப்பது இந்த பன்முகத்தன்மையினால் ஆகும்.
இது என்னுடைய கன்னி உரையாகும். அதேபோன்று இது வரலாற்று கதையாகும். இலங்கை பாராளுமன்ற வரலாற்றில் 76 வருடங்களுக்கு பின்னர் விசேட தேவையுடைய ஒருவருக்கு பாராளுமன்ற வரம் கிடைத்திருக்கிறது.
இந்த வரம் தற்செயலாகவோ வெறுமனே கிடைத்த வரம் அல்ல. இதற்காக பாடுபட்ட குழுவொன்று இருக்கிறது. 17 இலட்சத்துக்கும் அதிக எனது விசேட தேவையுடைய சமூகம் சார்ப்பாக அந்த குழுவுக்கு நன்றி செலுத்துகிறேன்.
மேலும் விசேட வேவையுடைய சமூகத்துக்கு தற்போது வழங்கப்படும் 7500 ரூபா கொடுப்பனவு போதுமானதாக இல்லை. அதனால் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் அந்த கொடுப்பனவை 10 ஆயிரமாக நிச்சயமாக அதிகரிப்போம்.
மேலும் விசேட தேவையுடைய சமூகத்துக்கு தேவையான தீர்மானங்களை மேற்கொள்வதற்கு பாராளுமன்றத்தில் ஒரு பிரதிநிதித்துவம் தேவையாகும். அதனை உணர்ந்து கொண்டது தேசிய மக்கள் சக்தி மாத்திரமாகும்.
எமது இந்த விசேட தேவைப்பாடு நாங்கள் பலவந்தமாக எடுத்துக் கொண்டது அல்ல. அந்த வகையில் விசேட தேவையுடைய சமூகத்தினருக்கு பல அடிப்படை தேவைகள் இருக்கின்ற. அந்த தேவைகளை இந்த அரசாங்கத்தில் நிவர்த்தி செய்ய என்னால் முடிந்த முயற்சிகளை மேற்கொள்வேன்.
குறிப்பாக ரயில் போக்குவரத்து சேவையில் விசேட தேவையுடைவர்களுக்கு என எந்த வசதியும் இல்லை. அதனால் ரயிலில் தனியான ஒரு பெட்டியை விசேட தேவையுடையவர்களுக்கு ஒதுக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment