பொலிஸ் ஊடகப் பிரிவின் புதிய பணிப்பாளராகவும், பொலிஸ் ஊடகப் பேச்சாளராகவும், பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்தவாவுக்குப் பதிலாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP) கே. புத்திக மனதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
SSP மனதுங்க கந்தளாய் பிரிவில் இருந்து இப்பதவிக்காக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, பரீட்சை பிரிவின் பணிப்பாளராக இருந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐ.யு.கே. லொக்குஹெட்டி கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவின் பணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு மோசடி விசாரணை பிரிவிலிருந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எச்.டி.கே.எஸ். பெரேரா பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வு பிரிவின் புதிய பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, பொலிஸ் அத்தியட்சகர் கே.ஏ. உதய குமார, புத்தளம் பிரிவில் இருந்து வலான ஊழல் தடுப்புப் பிரிவின் பணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
உடன் அமுலுக்கு வரும் வகையில் 54 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டதற்கு அமைய இந்நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment