விசேட தேவையுடைய பாடசாலை மாணவர்களுக்கு கொடுப்பனவு - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 3, 2024

விசேட தேவையுடைய பாடசாலை மாணவர்களுக்கு கொடுப்பனவு

விசேட தேவையடையவர்கள், சிறுவர் இல்லங்களில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை புத்தகங்களை கொள்வனவு செய்வதற்கு 6,000 ரூபா உதவித்தொகை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த திட்டத்தை அடுத்த தவணையிலிருந்து அமுல்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

பிரதமரால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பிரேரணைக்கு நேற்று (02) அனுமதி கிடைத்ததாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

No comments:

Post a Comment