ஓட்டமாவடி - நாவலடி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நபரொருவர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் வியாழக்கிழமை (4) மாலை நாவலடி - கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.
நாவலடி பிரதான வீதியாக பொலன்னறுவை பகுதியை நோக்கிப் பயணம் செய்த ரிப்பர் வாகனமொன்று எதிரே வந்த முச்சக்கர வண்டியில் மோதியுள்ளது.
இவ் விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணம் செய்த ஓமனியாமடு பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார்.
அத்துடன், முச்சக்கர வண்டி சாரதி உட்பட அதில் பயணம் செய்த மூவர் காயங்களுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் பலியான நபரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்தை ஏற்படுத்திய ரிப்பர் சாரதி வாழைச்சேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment