கிழக்கு மாகாண முஸ்லிம் பாடசாலைகளுக்கு தொடர்ந்தும் விடுமுறை - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 27, 2024

கிழக்கு மாகாண முஸ்லிம் பாடசாலைகளுக்கு தொடர்ந்தும் விடுமுறை

கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் நாளை 28ஆம் திகதியும், நாளை மறுதினமும் 29ஆம் திகதியும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகரவின் அனுமதியுடன் இந்த இரண்டு நாள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மாகாண கல்விச் செயலாளர் எச்.இ.எம்.டபிள்யூ.ஜி. திஸாநாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில், நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக மூன்றாம் தவணைக் கல்வி நடவடிக்கைகளுக்காக தொடர்ந்தும் இயங்கிக் கொண்டிருக்கின்ற கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் நாளை மற்றும் நாளை மறுதினம் (28/29) ஆம் திகதிகளில் விடுமுறை வழங்கப்படுவதற்கான அனுமதியை கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஐயந்தலால் ரத்னசேகர வழங்கியுள்ளதாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் திருமதி சுஜாத்தா குலேந்திரகுமார் அறிக்கையொன்றின் ஊடாக தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்திலுள்ள 3ஆம் தவணை கல்வி நடவடிக்கைகளை தொடர்ந்து கொண்டிருக்கின்ற முஸ்லீம் பாடசாலைகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், அதிபர்கள், கல்விசாரா உத்தியோகத்தர்களுக்கு ஏற்படக்கூடிய அசெளகரியங்களை தவிர்ப்பதற்காகவே இவ்விடுமுறை வழங்கப்படுகின்றது என குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment