நாட்டில் கர்ப்பப்பை வாய் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சு இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் வருடாந்தம் 8,00 முதல் 1,000 வரையிலான எண்ணிக்கையில் கருப்பை வாய் புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்.
இதனைத் தடுக்கும் வகையில் 10 வயதைப் பூர்த்தி செய்துள்ள 6 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் அனைத்து மாணவிகளுக்கும் HPV தடுப்பூசியைச் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த HPV தடுப்பூசியானது இரு தடவைகள் செலுத்தப்பட வேண்டும்.
முதலாம் தடுப்பூசி செலுத்தப்பட்டு 6 மாதம் பூர்த்தி செய்யப்பட்ட பின்னரே இரண்டாம் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும்.
பாடசாலைகள் ஊடாக தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள முடியாத மாணவிகள் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்குச் சென்று தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள முடியும்.
எனவே, பெற்றோர்களும் மாணவிகளும் எந்தவித அச்சமுமின்றி இந்த தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment