சர்வதேச சந்தையில் அதிகரித்தது மசகு எண்ணெய் விலை - News View

About Us

About Us

Breaking

Thursday, October 3, 2024

சர்வதேச சந்தையில் அதிகரித்தது மசகு எண்ணெய் விலை

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து மசகு எண்ணெய் விலை ஒரு டொலருக்கு மேல் ஏற்றம் கண்டுள்ளது.

சர்வதேச சந்தையில் பிரென்ட் மசகு எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 1.08 டொலர்கள் அதிகரித்து 74.64 டொலர்களாக உயர்ந்துள்ளது. 

இதேநேரம் அமெரிக்க மேற்கு டெக்ஸாஸ் இடைநிலை, மசகு எண்ணெய் 1.12 டொலர்கள் அதிகாரித்து பீப்பாய் ஒன்று 70.95 டொலர்களாக உச்சம் பெற்றுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை (01) வர்த்தகத்தின் நடுவே இந்த இரு மசகு எண்ணெய் விலைகளும் 5 வீதத்திற்கும் மேல் அதிகரித்தது.

உலகின் ஏழாவது மிகப்பெரிய மசகு எண்ணெய் உற்பத்தியாளராக ஈரான் உள்ளது. 

ஓபெக் எனப்படும் மசகு எண்ணெய் உற்பத்தியாளர் கூட்டமைப்பில் உள்ள நாடுகளில் மூன்றாவது பெரிய மசகு எண்ணெய் உற்பத்தியாளராகவும் அது உள்ளது.

இந்நிலையில் மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் போர் பதற்றம் அதிகரித்திருப்பதோடு மோதல் மேலும் தீவிரமடைந்தால், ஹார்முஸ் கடல் வழியாக எண்ணெய் கப்பல் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படக்கூடும் என அஞ்சப்படுகிறது. 

ஓமன் மற்றும் ஈரான் இடையே உள்ள ஹார்முஸ் நீரிணை வழியே உலக வர்த்தகத்தில் 25 வீதமான மசகு எண்ணெய் விநியோகம் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment