இலங்கைக்கு சட்டவிரோத சிகரெட் கடத்தல் தொடர்பில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது, தலங்கமவில் பயணிகள் பஸ் உரிமையாளர் ஒருவரின் வீட்டில் பல்வேறு நபர்களின் 29 அடையாள அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அவற்றில் இருபத்து இரண்டு தேசிய அடையாள அட்டைகள், ஆறு சாரதி அனுமதிப்பத்திரங்கள் மற்றும் பொலிஸ் சார்ஜன்ட் பொலிஸ் அடையாள அட்டைகள் என்பன இருந்தன.
இது தொடர்பான விசாரணையின்போது, பஸ்களில் கண்டெடுக்கப்பட்ட பணப் பைகளில் அடையாள அட்டைகள் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரங்களை வைத்திருந்தமை தெரியவந்துள்ளது.
பணம் மற்றும் அடையாள அட்டைகள் அடங்கிய பணப் பைகளை வீசியெறிந்ததாகவும், பணப் பைகள் மற்றும் அடையாள அட்டைகளை உரிமையாளர்களிடம் வழங்காமல் தம்வசம் வைத்திருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதன் மூலம் சட்டவிரோத செயலுக்கு பயன்படுத்துவதற்காக அடையாள அட்டைகள் மற்றும் சாரதி உரிமங்களை சேகரித்துச் சென்றுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப் படை அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
தலங்கம, கந்தவத்தை வீதியில் அமைந்துள்ள பஸ்ஸின் உரிமையாளர் என கூறப்படும் நபரொருவரின் வீட்டில் சட்டவிரோத சிகரெட்டுகள் இருப்பதாக கிடைத்த தகவலின் பிரகாரம், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சில்வாவின் தலைமையில் நேற்று சோதனை நடத்தப்பட்டது.
No comments:
Post a Comment