வாகன இறக்குமதியை நிறுத்திவிட்டு பசி பட்டினியில் வாடு மக்களுக்கு உணவளியுங்கள் - இராதாகிருஸ்ணன் எம்.பி. - News View

About Us

About Us

Breaking

Sunday, September 15, 2024

வாகன இறக்குமதியை நிறுத்திவிட்டு பசி பட்டினியில் வாடு மக்களுக்கு உணவளியுங்கள் - இராதாகிருஸ்ணன் எம்.பி.

மலையக மக்களுக்கு வாகன இறக்குமதி தேவையில்லை. வாகன இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டு பசி பட்டினியில் இருக்கும் மக்களுக்கு முதலில் உணவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.

மலையக மக்கள் முன்னணி, மலையக இளைஞர் முன்னணி இணைந்து ஏற்பாடு செய்த இளைஞர் மாநாடு இன்று (14) ஹட்டன் டி.கே.டபிள்யு மண்டபத்தில் நடைபெற்றது.

இராதாகிருஸ்ணன் ராஜாராம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் டாக்டர் அப்துல் கலாம் குடும்பத்தின் பேரனும் சர்வதேச அப்துல் கலாம் அறக்கட்டளையின் ஸ்தாபக இணைத் தலைவருமான டாக்டர் ஏ.பி.ஜே.எம்.ஜே சேக் சலீம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

விசேட அதிதியாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் மற்றும் இந்தியாவின் தமிழ் நாட்டில் இருந்து வெளிவருகின்ற இதயக்கனி சஞ்சிகையின் வெளியீட்டாளரும் பிரதம ஆசிரியருமான இதயக்கனி எஸ்.விஜயன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

அத்தோடு, மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் பேராசிரியர் சங்கரன் விஜயசந்திரன், மலையக தொழிலாளர் முன்னணியின் செயலாளர் புஸ்பா விஸ்வநாதன், பொருலாளர் தாழமுத்து சுதாகரன் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் பெருந்திரளான இளைஞர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது உரையாற்றிய இராதாகிருஷ்ணன் எம்.பி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று காலையில் கூறினார். வாகன இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படும் என்று.

முதலில் மலையக மக்களுக்கு வாகன இறக்குமதி தேவையில்லை. வாகன இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டு பசி பட்டினியில் இருக்கும் மக்களுக்கு முதலில் உணவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வாகன இறக்குமதியை செய்து அவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் சூழ்ச்சியையே செய்கின்றார், ரணில் விக்கிரமசிங்க. எனவே மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment