இலங்கை அணியின் வீரர் கமிந்து மெண்டிஸ் தனது அறிமுக போட்டியிலிருந்து தொடர்ச்சியாக 8 போட்டிகளில் 50 இற்கும் அதிக ஓட்டங்களை கடந்த உலகின் முதலாவது துடுப்பாட்ட வீரர் எனும் சாதனையை படைத்துள்ளார்.
இன்று (26) காலியில் ஆரம்பமான சுற்றுலா நியூசிலாந்து அணியுடனான 2ஆவது டெஸ்ட் போட்டியில் அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.
இந்த குறிப்பிடத்தக்க சாதனை ஒரு புதிய உலக சாதனையாக கருதப்படுகிறது. இது அவரது டெஸ்ட் அறிமுகத்திலிருந்து நிலையான துடுப்பாட்ட திறமையை எடுத்துக்காட்டுகிறது.
கடந்த ஆண்டு, பாகிஸ்தானின் சவுத் ஷகீல் டெஸ்ட் வரலாற்றில் தனது முதல் ஏழு போட்டிகளில் ஒவ்வொன்றிலும் 50+ ஓட்டங்களை எடுத்த முதல் வீரர் ஆனார்.
காலியில் நடைபெற்றுவரும் நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் மெண்டிஸ் ஆட்டமிழக்காமல் 50 ஓட்டங்களை பெற்று இந்த சாதனையை படைத்துள்ளார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இதே மைதானத்தில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக அறிமுகமானதில் இருந்து மெண்டிஸ் தனது எட்டாவது அரைசதத்தை பூர்த்தி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment