சாதனை படைக்க ரொனால்டோவுக்கு இன்னும் 1 கோல் மட்டுமே தேவை - News View

About Us

About Us

Breaking

Wednesday, August 28, 2024

சாதனை படைக்க ரொனால்டோவுக்கு இன்னும் 1 கோல் மட்டுமே தேவை

கால்பந்து உலகின் லெஜண்ட் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது கோல் எண்ணிக்கையை 899 ஆக உயர்த்தி, 900 கோல்கள் என்ற மைல்கல்லை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறார். 

நேற்று நடந்த சவுதி ப்ரோ லீக்கின் அல் ஃபெய்ஹா அணிக்கு எதிரான போட்டியில் ஒரு கோல் அடித்து இந்த சாதனையை படைத்துள்ளார்.

கால்பந்து வரலாற்றில் 900 கோல்கள் அடித்த ஒரே வீரர் என்ற சாதனையை படைக்க இன்னும் ஒரு கோல் மட்டுமே தேவைப்படுகிறது. இந்த சாதனையை படைப்பார் என்ற எதிர்பார்ப்பு உலக கால்பந்து இரசிகர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது.

இது குறித்து பேசிய ரொனால்டோ, “எனது குறிக்கோள் எப்போதும் வெற்றி பெறுவதே. ரெகார்டுகளை நான் பின்பற்றுவதில்லை. ஆனால், இந்த சாதனை நிச்சயமாக எனக்கு மிகவும் முக்கியமானது. எனது இரசிகர்களுக்காகவும், அணியின் வெற்றிக்காகவும் நான் தொடர்ந்து முயற்சிப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.

ரொனால்டோவின் இந்த சாதனை, கால்பந்து உலகில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதும் என்பதில் சந்தேகமே இல்லை. அவரது இந்த அபாரமான சாதனைக்கு உலகெங்கிலும் உள்ள இரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment