தரமற்ற சவர்க்காரங்களை பயன்படுத்துவதால் குழந்தைகளின் தோலில் பல்வேறு உபாதைகள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதாக அரச குடும்ப சுகாதார சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போதைய பொருளாதார நிலைமை காரணமாக சில பெற்றோர்கள் குழந்தைகளுக்கு தரமற்ற குழந்தை சவர்க்காரத்தினை பயன்படுத்துகின்றனர் என அந்த சங்கத்தின் பொருளாளர் பிரியங்கனி சுசங்கிகா குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தரமற்ற சவர்க்காரங்களை பயன்படுத்துவதால் அதன் விளைவு எதிர்காலத்தில் ஏற்படும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் “இந்நாட்களில் குழந்தைகளுக்கு சில ஒவ்வாமைகள் நிலவுவதாக எமக்கு அறியக்கூடியதாக உள்ளது.
இதை ஆராய்ந்தபோது ஒரு விடயம் புரிந்தது, தரமற்ற குழந்தை சவர்க்காரத்தினை பயன்படுத்துவதால் இந்த நிலை ஏற்படுகிறது.
குறிப்பாக, தாய்மார்கள் குழந்தைகளுக்கான சவர்க்காரத்தினை பயன்படுத்தும்போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.
இலங்கை தர நிர்ணய நிறுவனத்தினால் வழங்கப்பட்ட சான்றிதழுடன் கூடிய குழந்தை சவர்க்காரத்தினை பயன்படுத்துவதே பொருத்தமானது.
குழந்தையின் தோல் மிகவும் உணர்திறன் வாய்ந்த இடம். ஆகவே இன்றல்ல பல வருடங்களில் இதன் பலன் தெரியும். எனவே, குறிப்பாக பொருளாதார சூழ்நிலையில், இந்த விடயத்தில் கவனமாக இருங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment