போலி இறப்பர் முத்திரை தயாரித்து 17 இலட்சம் ரூபா மோசடி : ஆலயம் ஒன்றின் நிலையான வைப்பு நிதி கொள்ளை - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 15, 2024

போலி இறப்பர் முத்திரை தயாரித்து 17 இலட்சம் ரூபா மோசடி : ஆலயம் ஒன்றின் நிலையான வைப்பு நிதி கொள்ளை

யாழ்ப்பாணத்தில் கரவெட்டியில் அமைந்து இருக்கும் ஆலயம் ஒன்றில் பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தரின் இறப்பர் முத்திரையை போலியாகத் தயாரித்து சுமார் 17 இலட்சம் ரூபா நிதி மோசடி இடம்பெற்றுள்ளது.

குறித்த ஆலயத்தின் தலைவரே இவ்வாறு ஆலய நிலையான வைப்பில் இருந்த பெருந்தொகையான நிதியை களவாடியுள்ளார்.

2023 ஐப்பசி மாதமளவில் 10 இலட்சம், 2024 தை மாதமளவில் 7 இலட்சம் இதற்காக போலியாக கூட்டறிக்கை தயாரித்தும் கலாசார உத்தியோகத்தரின் இறப்பர் முத்திரையையும் போலியாக தானாகவே செய்து நெல்லியடி பிரபல வங்கியிலிருந்த பணத்தை களவாடியுள்ளார்.

இதேவளை இவர்களின் மோசடி அம்பலம் ஆகியதும் உப தலைவர், பொருளாளர் தாமாகவே முன்வந்து பணத்தை வட்டியும் முதலுமாகக் செலுத்தியுள்ளனர் .

இம்மோசடி தொடர்பாக நிர்வாகம் எவ்விதமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாது இருப்பது மிகவும் மனவேதனை அளிக்கும் நிலையில் அரச முத்திரையை போலியாக தயாரித்தமைக்கு கரவெட்டி உத்தியோகத்தர் பிரதேச செயலகம் நடவடிக்கைகள் எடுக்குமா ?

குறித்த விடயம் தொடர்பில் கரவெட்டி பிரதேச செயலாளரை தொடர்புகொண்டு கேட்டபோது போலி இறப்பர் முத்திரை பயன்படுத்த பணம் எடுக்கப்பட்டமை உண்மை எனவும் அது தொடர்பில் மல்லாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

பு.கஜிந்தன்

No comments:

Post a Comment