மீராவோடையில் பஸ்ஸுடன் மோதிய மோட்டார் சைக்கிள் : இரு இளைஞர்கள் வைத்தியசாலையில் அனுமதி : ஒருவர் கவலைக்கிடம் - News View

About Us

About Us

Breaking

Monday, March 25, 2024

மீராவோடையில் பஸ்ஸுடன் மோதிய மோட்டார் சைக்கிள் : இரு இளைஞர்கள் வைத்தியசாலையில் அனுமதி : ஒருவர் கவலைக்கிடம்

(எச்.எம்.எம்.பர்ஸான்)

பஸ்ஸுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் இன்று (25) காலை 10.30 மணியளவில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீராவோடை பகுதியில் வைத்து இடம்பெற்றுள்ளது.

ஓட்டமாவடி - மீராவோடை ஊடாக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு பயணிகளை ஏற்றிச் செல்லும் இலங்கை போக்குவரத்து சபையின் வாழைச்சேனை கிளை பஸ் வண்டியில் மோட்டார் சைக்கிள் மோதி இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த வீதியால் மூன்று மோட்டார் சைக்கிளில் ரேஸ் ஓடிய இளைஞர்களே இவ் விபத்தில் சிக்கியுள்ளனர்.

இதில், இருவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறித்த விபத்தில் காயமடைந்த ஒருவரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment