தேசிய கொடியை அவமதிப்பவர்கள் மற்றும் முறையற்ற விதத்தில் கொடியை பயன்படுத்துவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கையை பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் வெளியிட்டுள்ளார்.
இவற்றை கண்காணிப்பதற்கு தனி குழு அமைப்பக்கப்பட்டுள்ளதாகவும் தேசபந்து தென்னகோன் மேலும் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பு காலி முகத்திடல் வீதி முழுமையாக மூடப்படவுள்ளது.
அதன்படி எதிர்வரும் பெப்ரவரி 3 ஆம் திகதி பகல் 2 மணி முதல் 4 ஆம் திகதி பகல் 12 மணி வரை குறித்த வீதி முழுமையாக மூடப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment