பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை உள்ளீர்ப்பதற்கான விண்ணப்பங்கள் நேற்று முதல் ஏற்றுக் கொள்ளப்படுவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கான விண்ணப்பங்களை Online ஊடாக அனுப்பி வைக்க முடியுமென, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
www.ugc.ac.lk என்ற இணையதளத்துக்கு பிரவேசித்து விண்ணப்பங்களை அனுப்பி வைக்க முடியும்.
விண்ணப்பங்கள் அக்டோபர் மாதம் 05ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படுமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுச் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய 02 இலட்சத்து 63 ஆயிரத்து 933 பரீட்சார்த்திகளில் 01 இலட்சத்து 66 ஆயிரத்து 938 பேர் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
அவர்களில் இம்முறை 45,000 பேர் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment