நாட்டின் பல வைத்தியசாலைகளில் பற் சத்திர கிசிச்சைகள் இடைநிறுத்தப்படலாம் என பல் வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர்.
பற் சிகிச்சைகளுக்கு அவசியமான 1300 மருந்துகளும் மருத்துவ சாதனங்களும் இல்லாததன் காரணமாக நாட்டின் சில வைத்தியசாலைகளில் பற் சிகிச்சைகள் பற் சத்திர கிசிச்சைகள் ஸ்தம்பிக்கும் நிலையேற்படலாம் என அரசாங்க பற் சத்திர சிகிச்சை நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
1300 மருந்துகளில் மிகவும் அவசியமான 233 மருந்துகளை வழங்குமாறு சுகாதார அமைச்சிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டபோதிலும் சுகாதார அமைச்சு அவற்றை வழங்கவில்லை என அரசாங்க பல் சத்திர சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் மஞ்சுள டீ ஹேரத் தெரிவித்துள்ளார்.
பற் சிகிச்சைக்கு தேவையான போதிய மருந்துகள் இல்லாததன் காரணமாக பல பற் சிகிச்சைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன, குறிப்பாக பற் சத்திர சிகிச்சைகள் ஆய்வுகூட சிகிச்சைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் குறித்து கவனம் செலுத்துமாறு மருத்துவ விநியோக பிரிவிற்கு நாங்கள் அறிவித்துள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment