உடைக்கப்பட்டது டி.ஏ. ராஜபக்ஷவின் நினைவுத் தூபி - News View

About Us

About Us

Breaking

Monday, May 9, 2022

உடைக்கப்பட்டது டி.ஏ. ராஜபக்ஷவின் நினைவுத் தூபி

நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள அரச எதிர்ப்பு போராட்டங்களின் இடையே, அம்பாந்தோட்டை மெதமுலன வளாகம் மீதும் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

அம்பாந்தோட்டை தங்காலை வீரகெட்டியவில் அமைக்கப்பட்டிருந்த டி.ஏ. ராஜபக்ஷவின் நினைவு தூபி மீதே இவ்வாறு போராட்டக்காரர்களால் சேதமாக்கப்பட்டள்ளது.

தங்காலை வீரகெட்டிய பகுதியில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தந்தையான டி.ஏ. ராஜபக்ஷவின் நினைவு தூபி போராட்டக்காரர்களால் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தூபியை அமைக்க பொதுமக்களின் பணம் விரயம் செய்யப்பட்டதாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மீது குற்றச்சாட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment