கொவிட் மரணங்கள் குறைவடையும் சாத்தியம், கிடைக்கும் தடுப்பூசியை விரைவாக பெற்று மக்கள் தங்கள் பொறுப்பை நிறைவேற்றுங்கள் - கலாநிதி சந்திம ஜீவந்தர - News View

About Us

About Us

Breaking

Tuesday, August 31, 2021

கொவிட் மரணங்கள் குறைவடையும் சாத்தியம், கிடைக்கும் தடுப்பூசியை விரைவாக பெற்று மக்கள் தங்கள் பொறுப்பை நிறைவேற்றுங்கள் - கலாநிதி சந்திம ஜீவந்தர

எம்.ஆர்.எம்.வசீம்

புதிய வைரஸ் திரிபுகளினால் நாட்டுக்கு பிரச்சினை ஏற்படா விட்டால் ஒக்டோபர் மாத இறுதியாகும் போது குறிப்பிடத்தக்க அளவு கொவிட் மரணங்கள் குறைவடையும் சாத்தியம் இருக்கின்றது. அதற்காக கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையை மேலும் துரிதப்படுத்த வேண்டும் என வைத்திய கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய நிலைமையில் கொவிட் தொற்றாளர்கள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கை குறைவடையும் சாத்தியம் தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

கொவிட் புதிய திரிபுகள் ஏற்படுவது தொடர்பில் நாங்கள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றோம். வைரஸ் தொற்று தீவிரமாக பரவும் நிலையில் உலகில் பெரும்பான்மையான மக்கள் கொவிட் தடுப்பூசி ஏற்றிக் கொள்ளும் வரைக்கும் புதிய திரிபுகள் ஏற்படுவதை யாராலும் தடுக்க முடியாது.

மேலும் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் செப்டெம்பர் ஆரம்பமாகும் போது நூறு வீதம் பூரணமாகும் என சுகாதார அமைச்சு அறிவித்திருக்கின்றது.

கிடைக்கும் தடுப்பூசியை விரைவாக பெற்றுக் கொண்டு, மக்கள் தங்களது பொறுப்பை நிறைவேற்ற வேண்டும். அதன் மூலமே நாட்டில் இலகுவான நிலைமையை ஏற்படுத்துவதற்கு முடியுமாக இருக்கும் என்றார்.

No comments:

Post a Comment