பயணத்தடையில் வைத்திய அடையாளத்தை முறைகேடாக பயன்படுத்திய மூவர் கைது - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 25, 2021

பயணத்தடையில் வைத்திய அடையாளத்தை முறைகேடாக பயன்படுத்திய மூவர் கைது

பயணக்கட்டுப்பாடு காலப் பகுதியில், அதனை மீறும் வகையில், வைத்தியர்களை அடையாளப்படுத்தும் வகையில் வாகனங்களில் '+' சின்னம் பொறித்தவாறு பயணித்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு பகுதியில் இக்கைது இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் நாட்டின் பல பகுதிகளிலும் இவ்வாறு மருத்துவர்களுக்கான அடையாளச் சின்னத்தை பொறித்தவாறு, நபர்கள் உலா வருகின்றமை தொடர்பில் தமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், இது தொடர்பில் விசேட கவனம் செலுத்தி வருவதாகவும் பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

இதேவேளை, இவ்வாறான நபர்களால் வைத்தியர்களின் கடமைகளுக்கும் இடையூறு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக, வைத்திய சங்கங்கள் விசனம் தெரிவித்துள்ளதோடு, அவர்களுக்கு எதிராக ஆள்மாறாட்டம் தொடர்பில், உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment