காபூலில் உள்ள தனது தூதரகத்தை மூடுகிறது அவுஸ்திரேலியா - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 25, 2021

காபூலில் உள்ள தனது தூதரகத்தை மூடுகிறது அவுஸ்திரேலியா

சர்வதேச படைகளை திரும்பப் பெறுவதால், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள தனது தூதரகத்தை வெள்ளிக்கிழமை மூடுவதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

காபூலில் அவுஸ்திரேலிய தூதரகம் 2006 முதல் திறக்கப்பட்டுள்ளது. பிரதமர் ஸ்காட் மோரிசன் மற்றும் வெளியுறவு அமைச்சர் மரைஸ் பெய்ன் ஆகியோர் இந்த மூடல் தற்காலிகமாக இருக்கும் என்று நம்புவதாகவும், எதிர்காலத்தில் அவுஸ்திரேலியா ஒரு தூதரகத்தை மீண்டும் அங்கு திறக்க முடியும் என்று நம்புவதாகவும் கூறினர்.

அடுத்த சில மாதங்களில் ஆப்கானிஸ்தானில் இருந்து சர்வதேச மற்றும் அவுஸ்திரேலிய படைகள் வெளியேறுவது “பெருகிய முறையில் நிச்சயமற்ற பாதுகாப்புச் சூழலைக் கொண்டுவருகிறது, அங்கு நமது தற்போதைய இராஜதந்திர இருப்பை ஆதரிக்க பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்க முடியாது என்று எமது அரசாங்கத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ஸ்காட் மோரிசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகால இராணுவத் தலையீட்டிற்குப் பிறகு, செப்டம்பர் 11 ஆம் திகதிக்குள் அமெரிக்க படைகள் வெளியேறும் என்று ஏப்ரல் மாதம் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உறுதியளித்தார்.

எனினும் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படை திரும்பப் பெறுவது ஆப்கானிஸ்தானை மீண்டும் முழு அளவிலான போருக்குள் தள்ளக்கூடும் என்ற அச்சங்களும் எழுந்துள்ளன.

No comments:

Post a Comment