தினகரன் பத்திரிகையின் முன்னாள் ஊடகவியலாளர் பதியுஸ்ஸமான் காலமானார் - News View

About Us

About Us

Breaking

Thursday, April 22, 2021

தினகரன் பத்திரிகையின் முன்னாள் ஊடகவியலாளர் பதியுஸ்ஸமான் காலமானார்

சிரேஷ்ட ஊடவியலாளரும், எழுத்தாளரும், சமூக சேவையாளருமான எம்.எச். பதியுஸ்ஸமான் இன்று காலமானார்.

சில நாட்கள் நோய் வாய்ப்பட்டிருந்த அவர், இங்கிலாந்தின் லெஸ்டரில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை வபாத்தானார்.

மாவனல்லையைச் சேர்ந்த அவர், மிக நீண்ட காலமாக தினகரன் பத்திரிகையில் சேவையாற்றி பின்னர் இங்கிலாந்தில் குடியேறி வாழ்ந்து வந்தார்.

பல சமூக பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட அவர், மரணிக்கும் போது 66 வயதாகும்.

ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு காட்டி ஆன்மீகத்தோடு நெருக்கமான சூழல்களை அமைத்துக் கொண்டு வாழ்ந்து வந்த அவர் இன்று தனது வாழ்க்கைப் பயணத்தை நிறைவு செய்துள்ளார்.

அன்னாருடைய மரணத்தில் துயர் கொள்ளும் குடும்பத்தினர் உறவினர்களுக்கு எமது அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment