ஸ்ரீ ‍ஜெயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ பீட மாணவர்களை சுய தனிமைப்படுத்துமாறு அறிவுறுத்தல் - News View

About Us

About Us

Breaking

Saturday, October 10, 2020

ஸ்ரீ ‍ஜெயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ பீட மாணவர்களை சுய தனிமைப்படுத்துமாறு அறிவுறுத்தல்

கொழும்பு, ஸ்ரீ ‍ஜெயவர்தனபுர பல்கலைக்கழக, விடுதிகளில் உள்ள முகாமைத்துவ பீட மாணவர்களை சுய தனிமைப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி 50 மாணவர்கள் சுய தனிமைப்படுத்தப்படுவார்கள் என பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கூறியுள்ளார்.

குறித்த பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளானமை அடையாளம் காணப்பட்டுள்ள நிலையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது முகாமைத்துவ பீட மாணவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புகளை பேணியவர்களிடத்திலும் பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

No comments:

Post a Comment