ஜப்பானிலிருந்து 261 பேர், வியட்நாமிலிருந்து 65 பேர் இலங்கை வருகை - News View

About Us

About Us

Breaking

Friday, July 3, 2020

ஜப்பானிலிருந்து 261 பேர், வியட்நாமிலிருந்து 65 பேர் இலங்கை வருகை

கொவிட்-19 தொற்றுக் காரணமாக, இலங்கைக்கு வர முடியாமல், ஜப்பானில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 261 பேர் இன்று (03) அதிகாலை இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

அவர்கள், ஜப்பானில் தொழில்வாய்ப்புக் கருதி புறப்பட்டுச் சென்றிருந்தவர்களாவர்.

ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் UL 455 எனும் விமானத்தின் மூலம், ஜப்பானின் நரீட்டா நகரிலிருந்து, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இக்குழுவினர் வந்தடைந்துள்ளனர்.

இவ்வாறு வருகை தந்த பயணிகள் அனைவரும் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, வியட்நாமில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 65 பேர் நேற்று (02) நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

வியட்நாம் விமான சேவைக்குச் சொந்தமான விமானத்தில் அவர்கள் இவ்வாறு வருகை தந்துள்ளனர்.

No comments:

Post a Comment