(இராஜதுரை ஹஷான்)
தோட்ட கம்பனிகள் ஜனாதிபதி குறிப்பிட்டதை போன்று மார்ச் முதலாம் திகதி தொடக்கம் மலையக தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாவை வழங்காவிடின் தோட்டங்கள் அரசுடமையாக்கப்படும் என்று அரசாங்கம் குறிப்பிடுவது நகைப்பிற்குரிய கருத்தாகும் என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயபால ஹெட்டியராச்சி தெரிவித்தார்.
அமரர் முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க பெருந்தோட்டங்களை அரசுடமையாக்கினார். ஆனால் அவர் எதிர்பார்த்ததை போன்று நிர்வாகத்தை அப்போது முன்னெடுக்கவில்லை.
அதன் பிறகு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கள மீண்டும் தோட்டங்களை கம்பனிகளுக்கு 55 வருட கால ஒப்பந்தத்தின் பிரகாரம் வழங்கினார்.
இன்றும் அரசுடமையாக்கப்பட்டுள்ள தோட்டங்களில் எதிர்பார்க்கப்பட்ட அளவு இலாபம் கிடைக்கப் பெறவில்லை. தனியார் கம்பனிகளின் ஊடாக மலையக மக்கள் பெறும் மாத கொடுப்பனவுகளை காட்டிலும் குறைவான வருமானத்தையே அரசுடமையாக்கப்பட்ட தோட்ட மக்கள் பெறுகின்றார்கள்.
மார்ச் முதலாம் திகதி தொடக்கம் 1000 வழங்கப்படும் என்று அரசாங்கம் குறிப்பிட்டது ஆனால் அதற்கான திட்டங்கள் ஏதும் வகுக்கப்படவில்லை. வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தோட்ட கம்பனிகள் மீது அழுத்தம் பிரயோகிக்க முடியாது. குறிப்பிட்டதை போன்று பெருந்தோட்ட மக்களுக்கு ஆயிரம் ரூபாவை அரசாங்கம் நிச்சயம் வழங்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment