(எம்.மனோசித்ரா)
கொரோனா வைரஸ் பிரச்சினைக்கு சீனா தீர்வு காணும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. சீன கம்மியூனிச கட்சியின் பொதுச் செயலாளருக்கு மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா அனுப்பியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது இந்த துன்பகரமான நேரத்தில் உங்கள் துயரை பகிர்ந்து கொள்வதுடன் சீனாவின் சில பகுதிகளில் பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தி மக்களின் சிரமங்களை களைய சீனா மக்களும், சீன கம்மியூனிச கட்சி தலைமையிலான அரசாங்கமும் எடுத்து வரும் முயற்சிகளை மக்கள் விடுதலை முன்னணி கவனித்து வருகிறது.
சீனாவின் பல பகுதிகள் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளது எனவும் இந்த சிரமமான வேலையில் பாதிக்கப்பட்ட சீனாவின் பிரதேசங்கள் மீண்டும் சீன மக்கள் வாழ்வதற்கு ஏற்ற இடமாக மாற்றியமைக்கப்படும் என்பதோடு, கொரோனா வைரஸை கட்டுப்படுத்தி இப்பிரச்சினைக்கு சீனா தீர்வு காணும் என மக்கள் விடுதலை முன்னணி நம்புகிறது.
கொரோனா வைரஸினால் ஏற்படும் நோயானது சீனாவில் கொள்ளை நோயாக மாறுவதிலிருந்து தடுக்கப்படும் என நாங்கள் கருதுகின்றோம்.
இத்தருணத்தில் சீன மக்களுக்கு எமது உறுதியான ஆதரவை தெரிவித்துக் கொள்ளுகின்றோம். சீனாவிலுள்ள அர்ப்பணிப்பான சுகாதார ஊழியர்கள் மற்றும் சீன கம்யூனிச கட்சிக்கும் இந்த மிக மோசமான சூழலில் அவர்களுடன் ஒன்றிணைந்துள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.
கொரோனா வைரஸ் பரவுவதிலிருந்து தடுப்பதற்கான வழி வகைகளை கண்டறிந்து அதற்கான மருத்துவமனைகளை வுஹான் நகரில் சீனா கட்டி பூர்த்தி செய்து இப்பிரச்சினைக்கு சீனா தீர்வு காணும் என எமக்கு நம்பிக்கை உள்ளது.
No comments:
Post a Comment