சாவகச்சேரி நகர சபை மண்டபத்தில் நேற்றுக் காலை வட மாகாண சுகாதார பணி உதவியாளர்கள் 454 பேருக்கு வழங்கப்படவிருந்த நியமனங்கள் சில முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணை நிமித்தம் பிற்போடப்பட்டுள்ளதாக வடக்கு ஆளுநர் செயலகம் அறிவித்தது.
நேர்முகத் தேர்வுக்கு தோற்றியும் இந்த நியமனம் தொடர்பில் பெயர் குறிப்பிடப்படாதவர்களின் மாவட்ட பிரதிநிதிகள் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை ஆளுநர் செயலகத்தில் சந்தித்தனர்.
அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க நேர்முகத் தேர்வில் பங்குபற்றிய அனைவரது புள்ளிவிபரங்களும் அடங்கிய பட்டியல் குறித்த பிரதிநிதிகளிடம் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அமைச்சினால் வழங்கப்பட்ட கட்டமைப்புக்கு எதிராக அல்லது தவறான நியமனங்கள் வழங்கப்பட்டிருக்குமாயின் அதற்கான பட்டியலை எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு ஆளுநர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேற்குறித்த பட்டியலை வட மாகாண சபையின் https://np.gov.lk/marks-details-of-health-volunteers-and-external-candid... என்ற இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம். இப்பட்டியலின் மூலம் ஒவ்வொரு விண்ணப்பதாரரும் பெற்றுக்கொண்டுள்ள புள்ளிகள் தொடர்பான விபரங்களை பெற்றுக்கொள்ளமுடியும் என ஆளுநரின் ஊடகப்பிரிவு தெரிவித்தது.
பருத்தித்துறை விசேட நிரூபர்
No comments:
Post a Comment