இரண்டு மாத காலப்பகுதிக்குள் பாடசாலைகளில் நிலவும் ஆசிரிய வெற்றிடங்கள் நிரப்பப்படும் - News View

About Us

About Us

Breaking

Sunday, June 30, 2019

இரண்டு மாத காலப்பகுதிக்குள் பாடசாலைகளில் நிலவும் ஆசிரிய வெற்றிடங்கள் நிரப்பப்படும்

இரண்டு மாத காலப்பகுதிக்குள் மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் நிலவும் ஆசிரிய வெற்றிடங்கள் நிரப்பப்படும் என்று மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் சிறிலால் நோனிஸ் தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்தில் ஆசிரிய வெற்றிடங்களுக்காக பட்டதாரிகளை இணைத்துக் கொள்ளும் போட்டிப் பரீட்சை கொழும்பு, களுத்துறை, கம்பஹா மாவட்டங்களிலுள்ள 13 மத்திய நிலையங்களில் இன்று நடைபெற்றது. 

இதில் 3500 பேர் தோற்றுகின்றனர். மேல் மாகாண அரச சேவை ஆணைக்குழு மற்றும் மேல் மாகாண கல்வித் திணைக்களம் இணைந்து இந்தப் போட்டிப் பரீட்சையை நடத்துவதாக மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் சிறிலால் நோனிஸ் குறிப்பிட்டார்.

இன்று இடம்பெறும் பரீட்சைப் பெறுபேறு விரைவில் வெளியிடப்படும். இரண்டு மாத காலப்பகுதிக்குள் மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்கள் படிப்படியாக பரீட்சைப் பெறுபேறுகளுக்கு அமைய பூர்த்தி செய்யப்பட இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment