உயிர்த்த ஞாயிறு தொடர் தாக்குதல் சம்பவத்தின் பின்னர் மினுவாங்கொட, குளியாப்பிட்டி, ஹெட்டிபொல உள்ளிட்ட பல பிரதேசங்களில் ஏற்பட்ட அமைதியற்ற நிலை காரணமாக சேதமடைந்த சொத்துக்களுக்காக இழப்பீடு வழங்கும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முழுமையாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கும் வரையில் பெரும்பாலான வர்த்தகங்களை ஆரம்பிப்பதற்காக முற்பணத்தை செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அலுவலகத்தின் பணிப்பாளர் ஆனந்த விஜயபால தெரிவித்தார்.
முழுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டை வழங்கும் அரசாங்க அலுவலகத்தின் ஆலோசனைகளுக்கு அமைய இந்த ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வழங்கப்படும் இழப்பீடுகள் தொடர்பில் பிரச்சினைகள் இருக்குமாயின் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு விபரங்களை கேட்டறிய முடியும்.
இதற்கான தொலைபேசி இலக்கங்கள் 011 2575803, 011 257-5813, 011 257-5826 என்பதாகும். அலுவலகத்தின் பணிப்பாளர் ஆனந்த விஜயபாலவிடம் விபரங்களைக் கேட்டறிய முடியும் என்றும் தொவித்தார்.
No comments:
Post a Comment