நாடு பூராகவும் சிறுநீரக நோய்த்தடுப்பு வேலைத்திட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டம் ஆறாவது இடத்தில் - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 10, 2019

நாடு பூராகவும் சிறுநீரக நோய்த்தடுப்பு வேலைத்திட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டம் ஆறாவது இடத்தில்

எஸ்.எம்.எம்.முர்ஷித் 
நாடு பூராகவும் சிறுநீரக நோய்த்தடுப்பு வேலைத்திட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டம் ஆறாவது இடத்திலுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பிராந்திய ஊடகவியலாளர்களுக்கான ஒரு நாள் செயலமர்வு நேற்று 10.04.2019ம் புதன்கிழமை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற போது, அதனை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

“நாட்டுக்காக ஒன்றிணைவோம்” வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பிராந்திய ஊடகவியலாளர்களுக்கான ஒரு நாள் செயலமர்வு இன்று 10.04.2019ம் திகதி புதன்கிழமை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் அரசாங்க தகவல் திணைக்களத்தினால் நடாத்தப்பட்டது.
அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜெயதிஸ்ஸ, உதவிப்பணிப்பாளர்களான திலகரட்ன, ஹரிசா அபேகோன், மட்டக்களப்பு மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் நகுலேஸ்வரன் உட்பட அரசாங்க தகவல் திணைக்களத்தின் அதிகாரிகள், பிராந்திய ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.

அங்கு மாவட்ட அரசாங்க அதிபர் தொடர்ந்து கருத்துத்தெரிவிக்கையில், மட்டக்களப்பு மாவட்டம் அபிவிருத்தி கண்டு வருகின்றது. கடந்த 2016ம் ஆண்டு 12701 திட்டங்கள் 10556.8 மில்லியன் ரூபாவிலும், 2017ம் ஆண்டு 14177 திட்டங்கள் 7338.06 மில்லியன் ரூபாவிலும், 2018ம் ஆண்டு 113 திட்டங்கள் 8553 மில்லியன் ரூபாவிலும் மேற்கொள்ளப்பட்டடுள்ளன. இந்தாண்டடில் இது வரை 63 திட்டங்கள் 76.26 மில்லியன் ரூபாவிலும் மேற் கொள்ளப்பட்டுள்ளன.

மாவட்ட செயலகம், விஷேட அபிவிருத்தித் திட்டங்கள் கிழக்கு மாகாண சபை, அமைச்சுக்கள், ஐரோப்பிய ஒன்றியம் என்பவைகளின் மூலம் இந்த அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனாதிபதியின் ஒன்றிணைக்கப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் மூலம் பல்வேறு வகையான வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதில் குறிப்பாக, கிராம சக்தி தேசிய வேலைத்திட்டம், உணவு விவசாய வேலைத்திட்டம், போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டம், சிறு நீரக நோய்த்தடுப்பு வேலைத்திட்டம், தேசிய சுற்றாடல் அபிவிருத்தி வேலைத்திட்டம், கடற்கரை சுத்திகரிப்பு வேலைத்திட்டம், பிள்ளைகள் பாதுகாப்ப, மாற்றுத்திறனாளிகள், விஷேட தேவையுடையோருக்கான வேலைத்திட்டம் எனப்பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எனவே, அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்கின்ற சக்திகளாக ஊடகவியலாளர்கள் காணப்படுகின்றார்கள். ஊடகவியலாளர்கள் இவ்வாறான வேலைத்திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment