பாடசாலை சிறுவன் ஒருவன் தமது வீட்டினுள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக நாவலபிட்டிய பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (02) பிற்பகல் 2.30 மணி அளவில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளதாக நாவலபிட்டிய பொலிஸார் மேலும் தெரிவித்தனர்
நாலபிட்டி கல்லோயா பகுதியை சேர்ந்த 13 வயதுடைய துமேஸ் மதுஷன் என்ற சிறுவனே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சிறுவன் நாவலபிட்டிய கிரின்வுட் தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்று வந்துள்ளதாகவும் சிறுவனின் தாய் தொழில் நிமிர்த்தம் மத்திய கிழக்கு நாடு ஒன்றில் பணிபுரிந்து வருவதாகவும் சிறுவனுக்கு தந்தை இல்லை எனவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
குறித்த சிறுவன் தமது பாட்டியின் பாராமரிப்பில் வளர்ந்த வந்துள்ளதுடன் நேற்று முன்தினம் பாடசாலையின் ஊடாக சுற்றுலா பயணம் ஒன்று ஏற்பாடு செய்து இருந்தபோதும் அந்த சுற்றுலா பயணத்திற்கு குறித்த சிறுவன் செல்லவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சிறுவனின் சகோதரர் பாடசாலை விட்டு வீடுவந்த போதே குறித்த சிறுவன் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்டுள்ளதாகவும் தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.
இந்த சிறுவன் நேற்று பாடசாலை செல்லாது தனது பாட்டியின் சாரியால் தமது வீட்டின் அறையில் தூக்கிட்டு கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது
சம்பவம் தொடர்பில் மரண விசாரனைக்காக நாவலபிட்டி நீதிமன்ற நீதவான் தலைமையில் விசாரணைகள் இடம்பெற்று சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக சடலம் நாவலபிட்டிய மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை நாவலபிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது
மலையக நிருபர் சதீஸ்குமார்
No comments:
Post a Comment