சட்ட விரோத மண்ணழ்வு உள்ளிட்ட சகல சமூக விரோதச் செயற்பாடுகளும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் - News View

About Us

About Us

Breaking

Saturday, April 13, 2019

சட்ட விரோத மண்ணழ்வு உள்ளிட்ட சகல சமூக விரோதச் செயற்பாடுகளும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும்

எஸ்.எம்.எம்.முர்ஷித்
கிழக்கில் பொது மக்களின் நலனுக்கு பாதகமாக அமையும் சட்ட விரோத மண்ணழ்வு உள்ளிட்ட சகல சமூக விரோதச் செயற்பாடுகளும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுமென ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டுதலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனாதிபதி செயலகத்தின் போதையொழிப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் மக்கள் பயன்பாட்டுக்காக வழங்கி வைக்கும் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றும் போதே கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதற்கமைவாக நேற்று 12.03.2019ம் திகதி வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பால்சேனையில் 20 இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்ட கல்லதிப்பு பிரதான வீதி திறந்து வைக்கப்பட்டதுடன், அப்பகுதியைச்சேர்ந்த வறிய குடும்பங்களின் சுயதொழிலைக் கட்டியெழுப்பும் வகையில் காசோலைகளும் வழங்கி வைக்கப்பட்டது.

நிகழ்வில் கோறளைப்பற்று வடக்கு வாகரைப் பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எம்.தாஹிர் மற்றும் அரச உயரதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் எனப்பலரும் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment