சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அலி சாஹிர் மௌலானா மற்றும் காத்தான்குடி, மன்முனைப்பற்று உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களும், பட்டியல் வேட்பாளர்கள், இடையிலான விசேட சந்திப்பு இன்று (24.02.2019 ஞாயிறு) இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலின் பின்னர் இராஜாங்க அமைச்சரின் காத்தான்குடிக்கான இணைப்பாளராக காத்தான்குடி முன்னாள் நகர சபை முதல்வர், ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பீட உறுப்பினருமான மர்சூக் அஹமட்லெப்பை உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன் போது காத்தன்குடி காத்தான்குடியை சூழ உள்ள பிரதேசத்திற்கான இராஜாங்க அமைச்சரின் இணப்பாளராக இன்று முதல் மர்சூக் அஹமட்லெப்பை செயற்படுவார் என சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அலி சாஹிர் மௌலானா தெரிவித்தார்.
No comments:
Post a Comment