இந்நாட்டில் கைப்பற்றப்பட்ட மிகப் பாரியளவான ஹெரோயின் தொகையுடன் கைது செய்யப்பட்ட இருவரையும் மார்ச் மாதம் 1 ஆம் திகதி வரையில் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் இருவரையும் இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது கோட்டை பதில் நீதவான் லோசன அபேவிக்ரம இந்த அனுமதியை வழங்கியுள்ளார்.
கொள்ளுபிட்டிய பகுதியில் உள்ள வாகன தரிப்பிடம் ஒன்றில் இருந்து இலங்கை வரலாற்றில் கைப்பற்றப்பட்ட பாரியளவான ஹெரோயினுடன் இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
2,945 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய 294 கிலோ 490 கிராம் ஹெரொயின் இவ்வாறு கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment