விவசாய, நீர்ப்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியின் இல்லத்தில் மீராவோடை அல் ஹிதாயா வித்தியாலய அபிவிருத்திச்சங்கம் மற்றும் மீரா ஜூம்ஆப்பள்ளிவாயல் நிர்வாக உறுப்பினர்கள் ஆகியோருடனான சந்திப்பு இடம்பெற்றது.
இச்சந்திப்பின் போது பாடசாலையில் நிலவும் அதிபர் வெற்றிடம் தொடர்பாகவும், எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
இந்நிகழ்வில் முன்னாள் தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட், மீரா ஜூம்ஆப் பள்ளிவாசல் தலைவர் அலியார் ஹாஜி, உதவிக்கல்விப் பணிப்பாளர்களான வீ.ரீ.அஜ்மீர், ஏ.ஜே.மர்ஷூக், அதிபர்களான எம்.சீ.ஐயூப்கான், எம்பி.எம்.நபீர் மற்றும் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
எஸ்.எம்.எம்.முர்ஷித்
No comments:
Post a Comment