ஜனாதிபதிக்கும் சர்வ கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் நிறைவு - News View

About Us

About Us

Breaking

Sunday, November 18, 2018

ஜனாதிபதிக்கும் சர்வ கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் நிறைவு

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சி உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் சற்று முன்னர் நிறைவடைந்துள்ளது. 

இன்று மாலை 5 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட கலந்துரையாடல் சுமார் இரண்டரை மணி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. 

பாராளுமன்றத்தில் கடந்த சில நாட்களாக இடம்பெற்ற அரசியல் அமைதியின்மை மற்றும் குழப்ப நிலையை முடிவுக்கு கொண்டுவந்து பாராளுமன்ற நடவடிக்கைகளை சிறப்பாக முன்னெடுப்பதற்கு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இடையில் உடன்பாடொன்றை ஏற்படுத்தும் நோக்குடன் இந்த சந்திப்பு இடம்பெற்றது. 

சபாநாயகர் மற்றும் மக்கள் விடுதலை முன்னணியினர் இந்த சந்திப்பிற்கான ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment