போர் நிறுத்தம் அமுலாகி உள்ளதாக ஈரான் அரசு அறிவித்துள்ளது. இதனை அந்நாட்டு அரச ஊடகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையில் போர் தீவிரமடைந்திருந்த நிலையில், போர் நிறுத்தம் தொடங்கியதாக ஈரானிய அரசு தொலைக்காட்சி உறுதிப்படுத்தியுள்ளது.
உள்ளூர் நேரப்படி இன்று (24) காலை 7.30 க்கு போர் நிறுத்தம் தொடங்கியதாக ஈரானிய அரச ஊடகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை இரு தரப்பும் போர் நிறுத்தத்தை மீறும் வகையில் செயற்பட வேண்டாமென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment