அரசியல் குழப்ப நிலை தொடர்பில் இந்து குருமார் அமைப்பு கவலை! - ஜனாதிபதிக்கு கடிதமும் அனுப்பி வைப்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, November 17, 2018

அரசியல் குழப்ப நிலை தொடர்பில் இந்து குருமார் அமைப்பு கவலை! - ஜனாதிபதிக்கு கடிதமும் அனுப்பி வைப்பு

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலை தொடர்பில் இந்து குருமார் அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு நேற்று (சனிக்கிழமை) அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே குறித்த அமைப்பு இவ்வாறு கவலை வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில், “கடந்த சில நாட்களாக நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் அசாதாரண நிலை தொடர்பில் ஆழமான வேதனையும், அதிருப்தியும் அடைகின்றோம்.

குறிப்பாக மக்களது இறைமையை கையேற்றிருக்கும் சட்டவாக்க நிறுவனமான நாடாளுமன்றத்தில் சர்வதேச மற்றும் உள்ளுார் பார்வையாளர்கள் முன்னிலையில் நடந்தேறிய சம்பவங்களால் தங்கள் மேல் நம்பிக்கை கொண்டுள்ள மக்கள் தலைகுனிந்துள்ளனர்“ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment