சிரியாவில் கடத்தியவர்களில் 19 வயது மாணவனை கொன்று ஐ.எஸ். அமைப்பினர் வெறியாட்டம் - News View

About Us

About Us

Breaking

Sunday, August 5, 2018

சிரியாவில் கடத்தியவர்களில் 19 வயது மாணவனை கொன்று ஐ.எஸ். அமைப்பினர் வெறியாட்டம்

சிரியாவின் சுவைடா மாகாணத்தில் இருந்து கடத்தி செல்லப்பட்டவர்களில் 19 வயது மாணவனை ஐ.எஸ். அமைப்பினர் கொன்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிரியாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள சுவைடா மாகாணத்துக்குட்பட்ட பல பகுதிகளுக்குள் கடந்த மாதம் 25ஆம் திகதி நுழைந்த ஐ.எஸ். அமைப்பினர் நடத்திய ஆவேச தாக்குதலில் சுமார் 300 பேர் கொல்லப்பட்டனர்.

பெரும்பாலும் பெண்கள் உள்பட 30-க்கும் அதிகமானவர்களை அவர்கள் பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். பிடிபட்ட பெண்களை உயிருடன் எரித்துக்கொல்லப் போவதாக ஐ.எஸ். அமைப்பினர் மிரட்டல் விடுத்திருந்தனர்.

பிணைக்கைதிகளை விடுவிக்க அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திவரும் நிலையில், கடத்திச் செல்லப்பட்டவர்களில் முஹன்னட் தவுக்கான் அபு அம்மர் என்னும் 19 வயது மாணவனை கொன்றுவிட்ட அமைப்பினர் அவரது பிரேதத்தின் படங்களை தங்களது இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

No comments:

Post a Comment