வந்தாறுமூலையில் பரபரப்பு: இளம் தாய் சடலமாக மீட்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, May 5, 2018

வந்தாறுமூலையில் பரபரப்பு: இளம் தாய் சடலமாக மீட்பு

ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வந்தாறுமூலை விஷ்ணு கோவில் வீதியில் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து இளம் தாயொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வந்தாறுமூலை விஷ்ணு கோவில் வீதியில் வசிக்கும் 24 வயதான அழகரத்தினம் டிசாந்தினி எனும் இளம் குடும்பப்பெண்ணே இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவரது சடலம் வீட்டின் வாசல் கதவருகே காணப்படட்டது.

இதே வேளை, பெண்ணின் 31 வயதான கணவனும், ஒரு வயது குழந்தையும் வீட்டில் இல்லையெனவும், அவரது தொலைபேசி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஏறாவூர் முஹம்மது அஸ்மி 

No comments:

Post a Comment